Relax

Earn from your Facebook

Quick Click Commissions

12/18/2010

Home - FanBox

Home - FanBox

12/04/2010

Pictures done

by me


9/19/2010

ANBOLI TV


BY
P. A. FREDRIK

tamifred

http://tamilfred.wordpress.com

8/15/2010

இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்?illai

வெள்ளையனை வெளியேற்றி விடுதலைப் பெற்றுவிட்டோம், 
எதற்காக விடுதலைப் பெற்றோம் என்று இந்த 62 வருடங்களில் அறிந்தோமா?
இல்லை!


P. A. FREDRIK'S

P. A. FREDRIK'S

7/30/2010

BREATH AND MIND CONTROL COURSE


BREATHING AND MIND CONTROL TO ACHIEVE GOALS
My sample introductory lecture and training (Free) – 40 minutes

Ladies and Gentlemen,
This introductory meeting and future gatherings here are purely based on physical, Yoga and mental training programs to introduce  self-improvement techniques to individuals and not a magic, not related to any religious or prayer groups and not against the Church activities or not against God, Medical and Nature.

1.                    INTRODUCTION

×                     I think everybody here is breathing.
×                     What is new I am going to tell about breathing, somebody doubting me here.
×                     Everybody is breathing right from our birth to this earth. True? Yes.
×                     How many people here are aware of your breathing?
×                     What is awareness of breathing? Why we should? Is it a Waste of time? No.
×                     TIP –1, Do you know that we all are breathing now through only one nostril at a time either left or right and nobody can breath by both the nostrils at a time.
×                     TIP – 2, It will automatically changing to left to right nostril naturally at every half an hour without any efforts by us.
×                     This is your first awareness of your own breathing.
×                     How to test this?
×                     FREE TRAINING LESSON - 1.
×                     Now Take a deep breath, put your right or left hand back palm near to your nose, exhale your breath forcefully and find out by which nostril you are breathing.
×                     Now everybody has got awareness of his or her breath form which nostril.
×                     How many are here now breathing by right nostril? Please raise your hands.
×                     How many are here now breathing by left nostril? Please raise your hands.
×                     So 20 people are breathing on right nostrils, 18 people are breathing on left nostrils, and I am breathing by right nostril now.
×                     Within half an hour’s time, this will change to other nostril if you are healthy.
×                     Why we are all not breathing by the same nostril, somebody from right somebody from left. This is according to your health and habits. I’ll detail that on the course.
×                     TIP – 3, What is the use of knowing these things? There is something to do or not to do while you are breathing on left or right nostril. Details on training course.
×                     TIP – 4, You can change the breathing to other nostrils at any time by training.
×                     Do you think our extent of life is determined by God by number of years? No.
×                     TIP – 5, We all are created by God with number of breathes i.e., 800,000,000 breathes deposited with us as bank balance to live healthily100 years at the rate of 15 healthy breathes per minutes.
×                     But we all are over spending, misusing and destroying the breath balance in all means of modern world activities and dying sooner or later irregularly.
×                     Right from our birth to 5 years of our age, we are following the prescribed rate of breathing. After that we are starting to breath irregularly and faster due to excitements, fears, frustrations, anger, cry, worries, parents, teachers, Movies, radio, T.V., fast food, smoking, alcohol, tea, coffee, sickness, environment, pollution, sex and hurrieness for all etc., etc.,
×                     Many people are almost exhausting 50% of their reserve of 800 Million breathes before they reach the age of 30 and may die at the age of 60.
×                     Now we have the chance of repairing the losses by some real and proved methods and training which are already invented by our forefathers centuries before.
×                     TIP – 6, As we all have to breath about 12 to 15 times per minutes, we can reduce the number of breathes at 8 breathes per minute at least for certain times in a day by proper training and regular practice.
×                     TIP – 7, Do you know it is Scientifically proved that the slow breathing (at 4 breaths/min) creatures like Tortoise are living longer and the fast breathing (at 22 breaths/min) creatures like Rabbits are dying sooner.
×                     As per my explanations, so far you may think the breath control is only to live longer, but some people here may not like to live longer. Is that True? No.
×                     The breathing control training will lead you to healthy life, to gain positive attitude and thinking, to control the mind, to achieve goals, to drive phobias, to get braveness, to drive fears, to get leadership, humanity, kindness and liked by everybody etc., etc., from smallest benefits to make even miracles. There are endless to gain and nothing to loose. You’ll feel it.
×                     Eventhough our regular breathing is going on automatically, it has gone out of control as creation of God and has to be CONTROLLED. That’s why we are calling this as “Breath Control”.
×                     As other persons can not see any material benefits directly on hand from the people who get will be benefited by this training, many people are not believing this techniques.
×                     To take advantages of this training, first you should have your own strong Belief, Desire to take training, Proper regular Practice and Aim to achieve your goals.
×                     Everything is possible in this world if you have strong wish.
×                     The only one substance God generously created and make it available Free of cost anywhere in this world is Air or Oxygen with tremendous Powers in it which can be absorbed by all the creatures through breathing. Why should we ignore that?
×                     Unless you properly process the air through our body mechanism to breathe properly as he created, the powers of the air will not reach us.
×                     How we can find whether we are breathing properly or not.
×                     If any body here tell me now that ‘I don’t have any problem, no worry, no pain etc., and 100% happy and healthy etc., they can leave this room now. Is there any body? No.   Even I cannot tell and leave this room.
×                     So the results of all our sickness, pains, worries, hating, shouting, restlessness, plotting, war, riots, robbery, depressions and all negative things happening to us are, due to somehow connected to your irregular breathing patterns. I’ll prove this in the training sessions of breathing and mind control.
×                     In this room many people are here with different  colour, national, race, positions, tall, short, male, female, child, young, rich, poor, old, healthy or sick but all are breathing the only one same air. No difference. Not only here in all over the world the air is connected and only one.
×                     We are taking with us our own private food, water, clothes etc., when we go out different places or different countries but any body taking any private air to breath wherever we are going? Why? By this way we are all ONE and are inter-connected and communicating each other by breathing the only ONE air anywhere in the world.
×                     I will tell you in my mind control training how to develop the Good Will communication skills to even unknown persons through mind control.
×                     One thing I want to tell now, Nobody can use the powers you are going to get through the Breathing and Mind control course for any BAD things for you or others. It will not work. If you try, it will take reverse and you will be in trouble.
×                     The Breath and Mind Control group course is for 4 weeks and on Monday, Wenesday and Fridays at 2 hours per day in evening 6.00 PM totally 24 hours trainining costs    Rs. 3600.00 per adult in advance. The minimum age limit is 18 years.
×                     The course cost per head is for the personnel group training, training materials and  Hall rents etc.,
×                     5% discount per head will be given to the student introducing another student.
×                     No individual training available.
×                     5% group discount for all the school groups, office groups or any social groups.
×                     Still I didn’t consider about online courses.

P. A. FREDRIK
(fredubai@hotmail.com)


7/26/2010

குற்றம் செய்யாதக் குற்றவாளிகள்

யார்? நாம்தான், நுகர்வோர்கள்.
எல்லா ஊர்களிலும் உள்ள மின்சார வாரியங்களின் குளறுபடிகளும், ஒழுங்கீணங்களும், நுகர்வோரைக் கஷ்டப் படுத்துவதும் வரவர அதிகமாகிக் கொண்டேப் போகிறது.
முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமானாலும் காரணமின்றி மின்தடை செய்கிறார்கள்.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
வாரிய ஊழியர்கள் அவரவர்களின் அன்றாட வேலைகளை மனசாட்சியுடன், வாங்கும் சம்பளத்துக்கு சரியாக அப்பப்போது வேலை செய்திருந்தால் இப்படி நடக்குமா?
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும்
‘மீட்டர் ரீடிங்’ எடுத்து பில் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை.
யாரோ ஒரு சோம்பேறி வருவான், சில வீடுகளுக்கு மட்டும் செல்வான், சில வீடுகள் திறந்திருந்தும்கூட, பூட்டியிருக்கிறது என்றுக் குறிப்பிட்டு, தற்சமய ‘ரீடிங்கைக்’ குறிப்பிடாமல், எந்த ஆதாரமும் இல்லாமல், தனக்குத் தோன்றிய ஏதோ ஒரு எண்ணை எழுதி இவ்வளவு தொகை கட்ட வேண்டுமென்றுக் குறிப்பிட்டு, பில்லைப் போட்டுவிட்டுப் போய்விடுவான்.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
இப்படிப் பல பில்கள் என்னிடம் இருக்கின்றன. இதைப் படிப்பவர்களில் பலப் பேருக்கு இப்படி நடந்திருக்கும் நிச்சயம். 
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
எனக்கு மாதாமாதம் சராசரியாக ரூபாய் நூறிலிருந்து ரூபாய் இருனூறு வரை மின்சார பில் வரும். இம்மாதம் மேலேக் குறிப்பிட்டப்படி, ஒரு சோம்பேறி ‘ரீடிங்’ எடுக்காமல் ரூபாய் ஏழாயிரம்+ என்றுக் குறிப்பிட்டு பில் போட்டுவிட்டுப் போயிருக்கிறான். ஒரு சாதாரணக் குடியிருப்புக்கு ரூ.7000.00 மாதத்திற்கு ஆகுமா? என்றுக்கூட யோசிக்காமல், எந்த ஆதாரமோ, அத்தாட்சியோ, அடிப்படையோ, ரீடிங்கோ இல்லாமல் இப்படி எழுதலாமா? இதை கட்டுவதா வேண்டாமா?
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
சாதாரணமாக மின்சார பில் வந்தால் வீட்டிலுள்ள யாராவது நேரம் கிடைக்கும்போதுக் கட்டிவிட்டு வருவோம். ‘வீடு பூட்டியிருக்கிறது’ என்றுக் குறிப்பிட்டிருந்தால், ஜே.இ ஆபிஸ் போக வேண்டுமாம், பின் 


ஏ.இ. ஆபீஸ் போக வேண்டுமாம், பின் மெயின் ஆபீஸ் போக வேண்டுமாம். இதற்கு ஒருநாள் விடுமுறை எடுக்க வேண்டும்.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு மாத மின்சார பில் வந்தது. எவ்வளவு ரூபாய் என்று நினைக்கிறீகள்?
ருபாய் 17000.00+
நம்பமுடிகிறதா? நடந்ததுதான். இதை எடுத்துக்கொண்டுப் பல ஆபீஸ்கள் சென்றபின் சில கண்டுபிடிக்கப் பட்டன.
அதேபோல் ‘ரீடிங்’ எடுத்த ஒரு சோம்பேறி, நான்கு இலக்கம் கொண்ட முந்தைய மாத ‘ரீடிங்’க்குப்பின் மூன்று இலக்கங்களை இந்த மாத பில்லில் எழுதியிருக்கிறான். அதைக் கணணியில் இட்டபின், அந்த உண்மையுள்ள கணணி, மீட்டரின் முழு 10000 யூனிட்டுகளோடு, இந்த மூன்று இலக்க யூனிட்டுகளையும் கூட்டிக் கணக்குப் போட்டு, ரூ.17000.00+ என்றுக் கூறியிருக்கிறது. எந்த அலுவலரோ பொறியாளரோ சிறிதுகூட சரிபார்க்காமல் இந்த நம்பமுடியாத பில்லைக் கட்டச்சொல்லி அனுப்பியது.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
மின்சாரக் கட்டுபாட்டிற்காக சில நாட்களில் சிலமணி நேரங்கள் மின்தடை செய்கிறார்கள். சரி, பல நாட்களில் பல தெரு விளக்குகள் பகல்
‘பத்து மணிவரை’ எரிகிறதே அது எந்த மின்சாரம்?
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
அதிருக்கட்டும், மின்சார வாரியத்தில் O&M, ‘ஓஅண்ட்எம்’ என்று ஒரு பகுதியில் ‘பராமரிப்பு’ என்ற செக்ஷனில் பராமரிப்பு என்றால் என்ன என்றுக்கூட அர்த்தம் தெரியாதவர்கள் வேலை செய்கிறார்கள். பல தெருக்களில் இரவு விளக்குகள், தெரு சந்திப்பு விளக்குகள், தலைவர்கள் சிலைமுன் விளக்குகள், காந்திசிலை அருகில்கூட விளக்குகள், ஆழமாக சாலையோரம் வெட்டியப் பள்ளங்கள் பக்கம் விளக்குகள் எல்லாம் பல மாதங்களாக எரிவதில்லை, இதுதான் ‘பராமரிப்பா?’
மின்சார வாரியத்தின் குளறுபடிகளில் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
ஒரே ஒரு துளி மழை சொட்டினால், உடனே மின்சாரம் தடைபடும். ஏன்? இது என்ன சிஸ்டம்? என்ன மின்சாரப் பொறியியல்? ஒரு துளி மழை பெய்தால் கட்டிடம் இடிந்துவிடும் என்று கட்டிடப் பொறியாளர் சொன்னால் ஒத்துக் கொள்வார்களா?      
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.
பல அலுவலகங்களில் அலுவலர்கள், முதல் தேதி சம்பளம் வாங்குவதற்கும், மற்ற எல்லா நாட்களும் கிம்பளம் வாங்க மட்டும்தான் அலுவலகம் செல்கிறார்கள், தங்கள் வேலையை செய்ய அல்ல.
மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் பாதிக்கப்படுபவர்கள்,
குற்றம் செய்யாக் குற்றவாளிகளான நுகர்வோர்கள்.


பாப்ரட்ரிக்

7/15/2010

யாருக்குப் பாராட்டு?

யாருடைய திறமைகளுக்கு, யாருக்குப் பாராட்டு?
யாரோ கண்விழித்துக் கற்பனை செய்து, எழுதியப் பாட்டுக்கு,
 யாரோ இரவுப்பகலாக இனிமையாக இசையமைத்தப் பாட்டுக்கு,
 யாரோ தாள-சுருதி சுத்தமாகப் பாடியப் பாட்டுக்கு,
யார் யாரோ பல இசைக்கருவிகளால் மெருகூட்டியப் பாட்டுக்கு,
 யாரோ அருமையாக ஒலிப்பதிவு செய்தப் பாட்டுக்கு,
யாரோ நடனமாடக் கற்றுத் தந்தப் பாட்டுக்கு,
யாரோ இயக்கிக் காட்சியமைத்தப் பாட்டுக்கு,
யாரோ ஒளிப்பதிவு செய்துப் படமாக்கியப் பாட்டுக்கு,
யாரோ! உதட்டசைத்துப் போலியாகப் பாடுவதுபோல் நடித்ததற்கு,
 யாரோ தான் கைகால்களைப் போலியாக ஆட்டியதற்குப் பாராட்டா?
யார் யாருடையத் திறமைகளுகோத் தனக்குப் பாராட்டு வருகிறது என்பது
யாவருக்கும் தெரியுமேன்பதுத் தெரிந்தும், தெரியாததுபோல் நடிக்கும் நடிகருக்கு,
யார் யாரோ போலியான அவருக்கு மட்டும் போலியாக கைதட்டுவதும்,
    யாரோ தலைமைதாங்கி, அந்தப் போலியைப் பாராட்டுவதும்,
யார் யாருடையத் திறமைகளையோ மறைத்து அந்தப் போலிக்குப் பரிசளிப்பதும்,
யாருக்குமே! இவைகள் போலி என்பதோ தவறு என்பதோத் தெரியவே இல்லையா?
யார் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்! நயவஞ்சகம்!
யாரோவுடையத் திறமைகளைத் தனதாக்கிக் கொள்பவர்கள்தான் வாழ்கிறார்கள், வாழட்டும்.
யாரெல்லாம் மறைந்திருந்து அவர்களைத் தூக்கிவிடுகிறார்களோ! அவர்கள் தூங்கட்டும்.

பாப்ரட்ரிக் 
  

6/23/2010

செம்மொழித் தமிழுக்கு இழுக்கா?


செம்மொழித் தமிழுக்கு இழுக்கல்லவா? (பாப்ரட்ரிக்)
அழகாகவும் அழுத்தமாகவும் உச்சரிக்கவேண்டிய நம் இனியத் தமிழை இக்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எப்படியெல்லாம் தவறாக உச்சரிக்கிறார்கள் பாருங்கள்.
தவறாக எழுதுவதை ஏற்றுக்கொல்லாத அதே மக்கள் ஏப்படி உச்சரிக்கிறார்கள் என்றுக் கவனியுங்கள்.
மிக அலட்சியமாக ல, ள, ழ எல்லாவற்றையுமே ஒரே ‘ல’கரமாகவேப் பலர் பொது இடங்களில் பேசிவருகிறார்கள்.
இது செம்மொழித் தமிழுக்கு இழுக்கல்லவா?

நல்லத் தமிழர்கள் யாராவது இதை ஏற்றுக் கொள்வார்களா?
அவர்கள் எப்படியெல்லாம் உச்சரிக்கிறார்களோ அப்படியே அவர்கள் தமிழில் இப்படி எழுதிக் கொடுத்தால் எப்படி இருக்கும் படியுங்கள். எலுதியது தவரு என்பார்கல் அவர்கல்.
“பெரியோர்கலெ தாய்மார்கலே, நான் எனக்காக வால்வதிள்ளை, டமிலுக்காகவும் ஒங்கலுக்காக்கவும்தான் வால்கிரேன். என்ன ஆத்ர்ச்சி ஏட்ருகொல்ல வேண்டும். டமில்தான் என் மூச்சி, மக்கல்தான் என் உயிர். டமில் வால்க, மக்கல் வளர்க. ஒன்ட்ரு, ரன்டு, மூன்ட்ரு என்ட்ரு சொல்ரதர்க்கு முன்னே உங்ககிட்டே வர்வேன். என்ன நீங்க ஆதரிக்க மன்ட்ராடுகின்ட்ரேன். வேரோன்ட்ரும் இள்ளை. அள்ளேளூயா”

உச்சரிப்புக்களை மாற்றி மாற்றி உச்சரிப்பதுதான் இன்றைய நாகரீகமாம். மற்ற மொழிப் பேசுபவர்களும், மற்ற நாட்டில் பிறந்தவர்களும் பேசினால் தவறில்லை. தமிழ் நாட்டிலேயேப் பிறந்து, தமிழ் நாட்டில் கல்வி பயின்று, தமிழ் நாட்டிலேயேத் தவறாகப் பேசுவது மன்னிக்கவே முடியாத மாபெரும் குற்றம். தமிழுக்கு இழுக்கு!
நாங்கள் தமிழ் கற்றக் காலத்தில், தமிழாசிரியர்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தமிழ் உச்சரிப்புக்களைச் சொல்லித்தருவார்கள், பயிற்சியளிப்பார்கள், சரியாக உச்சரிக்கும்வரை விடமாட்டார்கள், வரவிட்டால் தண்டனையுண்டு. அப்படிப் படித்தினால்தான் இன்றும் சரியாக எங்களால் உச்சரிக்க முடிகிறது, மற்றவர்களின் தவறுகளும் தெரிகின்றன.
இப்போதிருக்கும் ஆசிரியர்கள் யாராவது தமிழ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு சொல்லித்தருகிரார்களா? இல்லை, ஏன்? இந்த ஆசிரியர்களுக்கே சரியாக உச்சரிக்கத் தெரியாமல், அவர்களுக்குத் தெரிந்த தப்பான உச்சரிப்புக்களை மாணவர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். அதனால் 90% மாணவர்கள் அப்படித் தப்பாகப் படித்து வெளிவந்தவர்கள் தான் இப்போது பாரெங்கும் உலவிவருகிறார்கள்.

அவர்களிடம் நல்ல உச்சரிப்பை எதிபார்ப்பது நம் முட்டாள்தனம்தான்.

தமிழுக்கு இழுக்கு!

ஆனால்

அப்படி அரைகுறையாகத் தவறானப் பள்ளியில் தப்பான ஆசிரியர்களிடம் தமிழ் கற்று வெளிவந்த முட்டாள்கள், அவரவர்கள் வீட்டிலும் தம் உறவினருடனும் தப்பானத் தமிழில் பேசிக்கொண்டிருக்கட்டுமே! பொது இடங்களுக்கும், மேடைகளுக்கும், ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகள் முன் வந்து நிற்க அவர்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது?
சில ஆசிரியர்கள் சரியாக சொல்லித்தந்தாலும் பலர் அதைத் தவறாகப் புரிந்துக்கொண்டுத் தப்பாக உச்சரிக்கிறார்கள். அழுத்தமான உச்சரிக்க வேண்டுமேன்பதற்காக இல்லை என்பதை இள்ளை என்று சொல்லாமா? ‘ற’ என்ற எழுத்தை ‘ட்ர’ என்று ஒளிப்பதுபோல் சொல்லுங்கள் என்றால் ஒன்ட்ரு, மூன்ட்ரு என்று சொல்கிறார்கள். ‘ஆறு’ என்பதை ‘ஆட்ரு’ என்பார்களா? சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் நாவிற்கு சற்றுப் பழக்கம் அளிக்க வேண்டும். நாவை சிறிது மடக்கக்கூட சோம்பேறித்தனம் பட்டு அலட்சியமாக உச்சரிப்பவர்களை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. எச்சரிக்கவேண்டும்.
தமிழுக்கு இழுக்கு!

தவறாக உச்சரிப்பவர்களுக்கு சரியாக உச்சரிப்பவர்கள் நல்லப் பயிற்சியளிக்கலாம். அப்படியும் அவர்களுக்கு வரவில்லை என்றால் அவர்களை தயவு இன்றி ஒத்துக்கிவிட வேண்டும். மிக நன்றாக உச்சரிக்கக் கூடியவர்கள் பலர் இருக்கும்போது உச்சரிக்க முடியாதவர்களை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? தாங்கள் உச்சரிப்பது தவறா சரியா என்றுக்கூட அவர்களுக்குத் தெரிவதில்லை, பிறர் சொன்னாலும் கேட்பதில்லை. அவர்கள் தங்களின் பேச்சையோப் பாட்டையோ ஒளிப்பதிவு செய்து தாங்ககளேக் கேட்கவேண்டும், மற்றவர்களையும் கேட்கச்சொல்லி அவர்களின் அபிப்பிராயங்களை கவனமாகக் கேட்டுத் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். எத்தனைப் பேர் அப்படி செய்கிறார்கள்?

வெட்கம்கெட்டு அரைகுறையாக வேளியேவந்த இந்த அறைவேக்காடுகளுக்கு எந்த விதமான
சோதனைகலையோ பயிற்சியோ அளிக்காமல் தேர்வுசெய்து ஒலி, ஒளிக் கருவிகள்முன் நிறுத்தும் ‘தமிழ்த் துரோக முட்டாள்கள்’ பலர் பல இடங்களில் இன்னும் இருக்கிறார்கள்.
நிறுத்தும் பொது இடங்கள்: மேடையேறிப் பேச, மேடை நாடகங்களில் நடிக்க, பாட்டுக் கச்சேரிகளில் பாட, வானொலியில் செய்திகள் வாசிக்க, அறிவிக்க, தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்க. நாடகங்களில் நடிக்க, நிகழ்சிகள் நடத்த, பல அறிவிப்புகள் செய்ய, விளம்பரங்கள் செய்ய, தேவாலயங்களில் பாடல்கள் பாட, வாசகங்கள் வாசிக்க, ஜெபம் செய்ய, பூசைகள் செய்ய, இப்படிப் பல.
முட்டாள்களை அனுமதிப்பவர்களும் படுமுட்டாள்கள்தானே! தமிழுக்கு இழுக்கு!
தங்களின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் உலகெங்கும் தெரிகிறது என்றும், இன்டர்நெட்டிலும் வருகிறது என்றுப் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிமேதாவிகள், அதேசமயம் தாம் தரம் குறைந்த தப்பானத் தமிழ் உச்சரிப்புகளை உலகெங்கும் பரப்புகிறோம் என்பதை ஏன் உணர்வதில்லை? யார் உணர்த்துவது?
தமிழுக்கு இழுக்கு!
தப்பாக உச்சரிப்பவர்கள் பொது இடங்களுக்குத் தகுதியற்றவர்கள் என்றுத் தெரிந்தும்கூட அவர்களுக்கு வாய்ப்பளிகிறார்கள் என்றால், அந்த வாய்ப்பளிக்கும் முட்டாள்களுக்கு அந்த முட்டாள்கள் உறவினர்களாக இருக்க வேண்டும், தலைவர்களின் பில்ளைகளாயிருக்க வேண்டும், அதிக லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும், அவர்களை பயமுறுத்தியிருக்க வேண்டும், இதில் எதுவாக இருந்தாலும் தங்கள் சுயநலத்திற்காகத் தமிழை ஏன் கொலை செய்யவேண்டும்? தமிழுக்கு இழுக்கு!
தமிழே அறியாத மேலை நாட்டு அறிஞர்கள் வீரமாமுனிவர், ஜி.யூ.போப் போன்றப் பலர் தமிழ் நாட்டுக்கு வந்து, நம் தமிழைக் கற்று, பல ஆராய்ச்சிகள் செய்து, தமிழைத் திருத்தி, சரியான உச்சரிப்புக்களை சொல்லிக்கொடுத்துப் போனப் பிறகும்கூட, இப்படி இந்த முட்டாள்கள் தவறாக உச்சரிப்பது, அந்த மேதைகளை அவமானப்படுத்தி இழிவுப்படுத்துவது ஆகும். இப்படிப்பட்ட முட்டாள்களைத் துரத்தியடிக்க வேண்டும்.
செம்மொழித் தமிழுக்கே இழுக்கா?

நல்லப் பிழையில்லாத் தமிழை ஊடகங்கள் மூலம் இனிப் பார்க்கவோ கேட்கவோ முடியுமா? அதுவரை நான் உயிரோடிருப்பேனா? எனக்கு இப்போது வயது அறுபத்து ஆறு.
என்னுடைய எழுத்துக்களில் எதாவதுத் தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

டமில் வால்க! வலர்க!!
அவர்கல் கேப்பார்கல், டமிலுக்கு இலுக்கா? அப்டீன்னா?
தாங்கமுடியவில்லையே!
நல்லத் தமிழை வாழவையுங்கள்!
பாப்ரட்ரிக்